நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும், தவெக சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் அவர் களம் இறங்கப் போகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் உலா வந்தன. இத்தகைய சூழலில், வரும் ஜூன் 11 அன்று தனது அரசியல் நிலைப்பாட்டை முறைப்படி அறிவிப்பதாக லாரன்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, ராகவா லாரன்ஸ் தவெக-வில் இணையாமல், பாஜக-வின் அண்ணாமலையுடன் கைகோர்க்க இருப்பதாகக் கூறப்படுகிறது. லாரன்ஸின் இந்த திடீர் மற்றும் எதிர்பாராத முடிவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தவெக தலைவர் விஜய்க்கும் அதிர்ச்சியை அளித்துள்ளதார்.
