CINEMA
“அந்த பாடகி அப்போவே சொல்லுச்சி.. சம்பளம், பொழப்புக்காக தான் கமல் பிக்பாஸ்ல அப்படி எல்லாம் பன்றாரு”.. கமலை வறுத்தெடுத்த ராதாரவி..
நடிகவேள் என அழைக்கப்படும் எம் ஆர் ராதாவின் மகன்தான் நடிகர் ராதாரவி. இவரது சகோதரி நடிகை ராதிகா. சினிமா பின்புலம் கொண்ட ராதாரவி, தமிழ் சினிமாவில் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கமல் குறித்த கேள்விக்கு நடிகர் ராதாரவி கூறியதாவது, அரசியலுக்கு கமல் ஏன் வந்தார் என்பது என்னை பொருத்த வரைக்கும் ஆச்சரியமான விஷயம்தான்.பாடகி சுசித்ரா. வெளுத்து வாங்கறாங்க. அவர் எந்த கட்சியில எங்க கூட்டணி சேர்ந்தாலும் தோத்துடுவாருன்னு ரொம்ப தைரியமா சொல்றார்.
கமல் இப்படி பண்ணக்கூடாது. பிக்பாஸ்ல இவரா போய் நான் செய்யறேன், நான் செய்யறேன்னு சம்பளம் வருது, பொழப்புக்காக ஏதோ செய்துகிட்டு இருக்கார். அதை நல்லா பண்றது இல்லே, அந்த கேள்வி எல்லாம் சரியில்லேன்னு சுசித்ரா சொல்றாங்க. அப்பதான் நமக்கே தெரியுது. ரஜினி இப்பவும் சூப்பர் ஸ்டார்தான். அவர் இந்த சீயக்காய் விளம்பரத்துக்கு எல்லாம் வரமாட்டார். சீயக்காய்ன்னு ஒரு பேச்சுக்கு சொல்றேன். தப்பா சொல்லல. பொது இடங்களுக்கு வழுக்கை தலையோட, வெள்ளை தாடியோட ரஜினி வர்றார். அவருக்கு வயசாயிடுச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். தலையில் விக் வெச்சிருக்காருன்னும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் நடிச்ச படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமா ஓடுது.
சினிமா நடிகன் என்பவன், பெட்டிக்குள்ள இருக்கிற வைரம் மாதிரி. பெட்டியை எப்படா திறப்பாங்கன்னு காத்திருக்கணும். டப்புன்னு பெட்டியை திறந்து காட்டின உடனே மூடிடணும். அப்பத்தான் அந்த வைரத்துக்கு மதிப்பு, மரியாதை எல்லாம். ஸ்கூல் டைம்ல இருந்து ஆழ்வார்பேட்டையில நான், அவர் எல்லாம் பிரண்ட்ஸ்தான். அவர் கீழ்மட்ட அளவுல எல்லாம் மூவ் பண்ண மாட்டார். ஹைலெவலில் தான் நடந்துப்பார். அவரு நடிகராகதான் இருக்காருன்னு தோன்றுகிறது என்று பதிலளித்து இருக்கிறார் நடிகர் ராதாரவி.