#image_title
விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைப்படத் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் நடிகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். முதலில் 2007 ஆம் ஆண்டு சிவி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு சிம்பு வரலட்சுமி ஆகியோர் நடித்த போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இப்படம் விக்னேஷ் சிவனுக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் பாவ கதைகள் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அடுத்ததாக LIK என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவை திருமணம் செய்ததன் மூலமாகவும் பிரபலமானார் விக்னேஷ் சிவன். இதற்கிடையில் புதுச்சேரியில் அரசு சார்பில் நடத்தப்படும் ஒரு ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டிருக்கிறார்.
#
இந்த செய்தி பரவி இணையத்தில் பரவி வந்தது. பலர் அதை Troll செய்தும் வந்தனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் நான் புதுச்சேரி அரசு ஹோட்டலை விலைக்கு கேட்கவில்லை. LIK படத்தின் சூட்டிங் ஏர்போர்ட்டில் படம் பிடிப்பதற்காக அனுமதி பெறவே அமைச்சரை சென்று சந்தித்தேன். என்னுடன் கூட வந்த ஒரு லோக்கல் மேனேஜர் அவர் சம்பந்தமாக எதையோ விசாரிக்க போக அதில் என்னை சேர்த்து செய்தியாக போட்டுவிட்டார்கள். அதனால் என்னை பற்றி பரவும் செய்திகள் முற்றிலும் தவறானது என்று பதிவு மூலம் விளக்கம் அளித்திருந்தார்.
#image_title
இந்நிலையில் இதுகுறித்து புதுசேரி சுற்றுலாத்துறை அமைச்சர் அளித்துள்ள பேட்டியில், விக்னேஷ் சிவன் என்னை சந்தித்தபோது அவருடன் சில உளூர் நபர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தான் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு வாங்க விருப்பமாக இருக்கிறார் என்று சொன்னார்கள். உடனே நான் எச்சரித்தேன். அதன்பின்னர் விக்னேஷ் சிவன் என்னிடம் புதுச்சேரியில் இசை நிகழ்ச்சி நடத்த அரசுக்கு சொந்தமான இடத்தை கேட்டார். அதற்கு கட்டணம் வசூலித்துவிட்டு அனுமதி கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…