தமிழக அரசியலில் நிலவும் முட்டுக்கட்டைக்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் கட்சி நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சி அமைவதைத் தடுக்கும் நோக்கில் பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அதன் பின்னணியிலேயே ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசியல் நெருக்கடியைக் கண்டிக்கும் விதமாகவும், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காங்கிரஸ் கட்சி மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. “த.வெ.க ஆட்சி அமையக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்படும் பாஜக மற்றும் ஆளுநரைக் கண்டித்து, நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். விஜய்யின் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் களமிறங்கியிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக…
ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபாடா வனப்பகுதிக்கு, ஷிபா பிரதான் என்ற சிறுவன் தனது மாமாவுடன் தேன் சேகரிக்கச்…
'ஆபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இந்திய விமானப்படை (IAF) சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. "இந்தியா…
மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…
மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…