காவல்துறை விசாரணையில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அஜித் குமார் இல்லத்திற்கு சென்ற நேற்று ஆறுதல் கூறினார். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்திற்கு கட்சி சார்பாக 2 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்ததோடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறையின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1 லட்சத்திற்கும் அதிகமானோரை திரட்ட தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம். திமுக அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கவே விஜய் இப்படியொரு பிளான் செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
