CINEMA
அஜித் – விஜய் ரெண்டு பேரும் இன்னைக்கு வரைக்கும் இப்படி தான் இருக்காங்க.. உள்ளதை சொன்ன பிரபலம்..!!
முன்னணி நடிகர்களான அஜித்தும் விஜய்யும் தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். இருவரும் ஒரே காலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். சினிமாவில் நடிக்க வந்த காலகட்டத்தில் பெரும் சிரமங்களை சந்தித்து இரண்டு பேரும் போராடி வெற்றி பெற்றனர்.
நடிகர் விஜயும் அஜித்தும் இணைந்து நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படம் 1995-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது இதனை ஜானகி சௌந்தர் இயக்கினார். ஸ்ரீ மாசாணி அம்மன் மூவிஸ் சௌந்தர பாண்டியன் தயாரித்தார். அதன் பிறகு ஏனோ சில காரணங்களால் இன்று வரை இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அஜித், விஜய் படங்கள் ரிலீசானால் இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு படத்தை பார்க்கின்றனர்.
யார் படம் வெற்றி பெறும் என ரசிகர்களுக்குள்ளே மோதல் நடக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் சித்ரா வெங்கட்ராமனுடனான ஒரு பேட்டியில் கூறியதாவது, ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடித்தார்கள்.
இருவருக்கும் இடையே அப்படி ஒரு நட்பு இருந்தது. ஷோபா அம்மா தான் வந்து சாப்பாடு கொடுப்பார் இருவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம். ஷூட்டிங் இடைவெளியின் போது அஜித்தும் விஜய்யும் பைக் எடுத்துக்கொண்டு எங்காது செல்வார்கள்.
எனக்கு தெரிந்து இன்றுவரை இருவரும் நண்பர்களாக தான் இருக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் தான் மோதி கொள்கின்றனர். இருவரும் அன்றிலிருந்து இன்று வரை நண்பர்களாகத்தான் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.