தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூலி, மாண்புமிகு மாணவன், வேட்டையாடு விளையாடு, சீனு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஸ்ரீரங்கத்து தேவதைகள், வாழ்க்கை, அலை ஓசை உள்ளிட்ட சீரியல்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மாணிக்கம் நாராயணன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயை வைத்து நான் படம் எடுத்து இருக்கேன்.

எப்போதும் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கு. பிரபல காமெடியான வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை எடுத்தேன். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்தேன் இதற்காக விஜய் வருவார் எனக் கூறி சூர்யாவிடம் அனுமதி வாங்கிவிட்டேன். அவரும் வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜயை அழைக்க சென்றேன். அப்போது விஜய் என் கையை பிடித்து மீடியாவில் நான் பேசியது சர்ச்சையாக இருக்கிறது. என்னால் இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியாது என கூறினார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் உடனே சூர்யாவிடம் சென்று பேசினேன். அவர் வருவதாக கூறினார்.

அதன் பிறகு இசை வெளியீட்டு விழா நடந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு வேன் வந்து நின்றது. யார் என்று பார்த்தால் விஜய் அந்த வேனில் இருந்து இறங்கி வந்து என்னை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார். அவரைப் பார்த்தவுடன் நான் அழுதுவிட்டேன். விஜய் எனக்கு செய்த உதவியை என்னால் மறக்கவே முடியாது என உருக்கமாக பேசியுள்ளார்.

