#image_title
ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு முன் இயக்குநர் ஷங்கரிடம் பல படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடிப்பில் மூன்று வெற்றி படங்களை அட்லி கொடுத்தார். தெறி, மெர்சல், பிகில் என்ற அந்த மூன்று படங்களுமே மாஸ் படங்களாக விஜய்க்கும் அமைந்தது. அட்லி தொடர் வெற்றி படங்களை கொடுத்ததால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற இயக்குநராக மாறினார்.
தமிழ் படங்களை இயக்கி வந்த அட்லி, பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் அழைப்பின் பேரின் மும்பைக்கு சென்றார். பதான் என்ற பிளாக் பஸ்டர் மூவியை கொடுத்திருந்த ஷாருக்கான் அடுத்து, தனது ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பை, அட்லிக்கு கொடுத்தார். விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்கள் பாலிவுட்டில் அறிமுகமான ஜவான் படம், இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 1150 கோடி ரூபாய் வசூலை குவித்து, வேற லெவலில் அட்லிக்கு வெற்றியை கொடுத்தது.
இதையடுத்து மும்பையில் சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் குடியேறிவிட்ட அட்லி, 40 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகமும் திறந்துவிட்டார். இந்நிலையில், அட்லி இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அட்லி இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்க போவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூனா, அல்லது ஷாருக்கானா என்பதுதான் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.
ஏனெனில் ஷாருக்கான் அவரது படங்களை, தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பது வழக்கம். ஜவான் படம் கூட, அதனால்தான், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முடியாமல் போனதாக தெரிய வந்துள்ளது. எனினும் ஸ்கிரிப்ட் எழுத துவங்கி விட்டார் அட்லி. இன்னும் 3, 4 மாதங்களில் அட்லி தனது படத்தை துவங்கி விடுவார் என்றும் உறுதியாகி உள்ளது. ஹீரோ ஷாருக்கானா, அல்லு அர்ஜூனா என்பதும் விரைவில் முடிவாகி விடும்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…