Categories: சினிமா

பார்த்திபனின் அசோசியேட் டைரக்டர் எழுதிய கதையை திருடினாரா பிரதீப் ரங்கநாதன் – அந்த பஞ்சாயத்துல இதெல்லாம் நடந்திருக்கா?

Spread the love

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ்டுடே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இவானா, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடுத்து இப்போது பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இதற்கெல்லாம் முன்பாக, பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்த படம் கோமாளி.

 

இந்த படத்தின் கதையை நடிகர் பார்த்திபனிடம் பணிசெய்த அசோசியேட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பிரதீப் ரங்கநாதன் திருடியதாக ஒரு தகவலை, ஒரு நேர்காணலில் நடிகர் பார்த்திபனே கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, லவ்டுடே படத்தில், பக்காவா இருந்த ஒரு நல்ல பையனை, கடைசியில இப்படி பார்த்திபன் மாதிரி பேச வெச்சுட்டீங்களே என ஒரு காட்சியில் வசனம் வரும். இதை பார்த்தவுடன், தியேட்டர்களில் படம் பார்த்தவர்களை போல நானும் உடனே சிரித்துவிட்டேன். பின்புதான் அதில் இருந்த குத்தல் எனக்கு புரிந்தது.

அதாவது நல்லா இருந்தவன், இப்படி பைத்தியம் மாதிரி ஆயிட்டியேன்னு சொல்றதுக்காக அந்த டைரக்டர் முயற்சி பண்றாருன்னு எனக்கு கொஞ்சம் தாமதமாக தெரிந்தது. ஆனால் நான் பைத்தியம் இல்லை. இதற்கு என்ன காரணம் என்றால், என்னிடம் கிருஷ்ணமூர்த்தி என்ற அசோசியேட் டைரக்டர் இருக்கிறார். அவர் ஒரு கதை பண்ணியிருந்தார். அந்த கதையும், கோமாளி கதையும் ஒண்ணுதான் அப்படீன்னு ஒரு பிரச்னை வருது. இந்த பிரச்னை குறித்து பாக்யராஜ் முன்னிலையில் பேசி 10 லட்சம் ரூபாய் கிருஷ்ணமூர்த்திக்கு வாங்கி தரப்பட்டது.

இது எப்பவோ முன்னாடி நடந்த ஒரு விஷயம். இதனால் இப்படி ஒரு சின்னதா ஒரு பழிவாங்கலாமான்னு தோணும். ஆனால் படம் பார்த்துவிட்டு, அந்த படம் எனக்கு எப்படி பிடிச்சதுன்னு பிரதீப் ரங்கநாதனுக்கு நான் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். பல மேடைகளில் நான் லவ்டுடே பத்தி பேசீட்டே இருக்கேன். இது என்னோட மெச்சூரிட்டி. இன்னும் கொஞ்சம் காலம் கழித்தால், அவருக்கும் அந்த மெச்சூரிட்டி வந்துவிடும் என்று பேசி இருக்கிறார் நடிகர் பார்த்திபன். இதன்மூலம் கோமாளி படத்தின் கதை, பார்த்திபனின் அசோசியேட் டைரக்டருக்கு சொந்தமானது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் நடிகர் பார்த்திபன்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago