எனக்கு 5 புருஷன்னு சொன்ன உடனே அழுக வந்துருச்சு.. அவங்க சொன்னதால தான் நடிச்சேன்.. ஓப்பனாக சொன்ன நடிகை பிரியங்கா..!!

By admin on வைகாசி 30, 2024

Spread the love

90ஸ் காலகட்டத்தில் காமெடி நடிகையாக வலம் வந்து பிரபலமானவர் பிரியங்கா. இவர் கவுண்டமணி, செந்தில், சந்தானம், வடிவேலு, யோகி பாபு உள்ளிட்ட முன்னாடி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு ரிலீசான காதல் தேசம் திரைப்படம் மூலம் நடித்து பிரியங்கா திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

PHOTOS: வடிவேலுக்கே டஃப் கொடுக்கும் காமெடி நடிகை பிரியங்காவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்களேன்..

   

கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக நடித்த பிரியங்காவுக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு பிரியங்கா இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக மருதமலை திரைப்படத்தில் இடம்பெற்ற போலீஸ் ஸ்டேஷன் காமெடியில் வடிவேலுவுடன் இணைந்து சூப்பராக நடித்திருப்பார்.

   

 

 

PHOTOS: வடிவேலுக்கே டஃப் கொடுக்கும் காமெடி நடிகை பிரியங்காவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்களேன்..

சமீபத்தில் பிரியங்கா அளித்த பேட்டியில் அந்த காமெடி சீன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா அந்த காட்சியை அரை நாள் தான் சூட் பண்ணாங்க. முதலில் இந்த காட்சியில் தான் நடிக்கப் போகிறோம் என்பது எனக்கு தெரியாது. பெரும்பாலான படங்களில் வந்துவிட்டோம் என்பதற்காக நடிப்பேன். அப்படிதான் மருதமலை படத்தில் இடம்பெற்ற போலீஸ் ஸ்டேஷன் கட்சியும்.

PHOTOS: வடிவேலுக்கே டஃப் கொடுக்கும் காமெடி நடிகை பிரியங்காவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்களேன்..

எனக்கு 5 புருஷன்னு சொன்ன உடனே அழுதுட்டேன். அதுக்கப்புறம் அம்மா சொன்னதால தான் அதில் நடிச்சேன் வேற வழியில்லாமல். இந்த காட்சியில் நடித்தால் யாராவது என்னை கிண்டல் பண்ணுவாங்க அப்படின்னு சொல்லி நடிக்க மறுத்தேன். அதன் பிறகு அம்மா சமாதானப்படுத்தியதால் நடித்தேன். அந்த காமெடி காட்சி பிரபலம் ஆனது. ஆனால் இன்று வரை யாரும் அந்த காட்சியை சொல்லி என்னை கிண்டல் செய்ததில்லை என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kumudam snegithi (@kumudamsnegithi)