மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா பெதியா கிராமத்தில் உள்ள ஒரு மதரஸாவில் சோதனை நடத்தப்பட்டபோது , மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்த மௌலானா ஜுபைர் அன்சாரி இந்த அறையில் வசித்து வந்தார். இதனையடுத்து ஜுபைர் அன்சாரி கைது செய்யப்பட்டார். காண்ட்வாவில் அடுத்தடுத்த சோதனைகள் நடத்தப்பட்டன, மேலும் அங்கு ஒரு பெரிய அளவிலான பணப் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
மௌலானா வசித்த அறை மேல் மாடியில் இருந்தது. இதனால் அவர் கிராமத்து குழந்தைகளையும் மக்களையும் பயமுறுத்துவாராம். கூரையில் ஏறாதீர்கள், அங்கு பேய்கள் அங்கு வாழ்கின்றன என்று. இந்த பயத்தின் காரணமாக, யாரும் அங்கு செல்லவில்லை. அவர் தனது ரகசிய அறையை நாணய அச்சிடும் தொழிற்சாலையாக மாற்றியிருந்தார். இங்கிருந்து, மௌலானா வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நாணயத்தாள்களை வழங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, காண்ட்வா போலீசார் மௌலானா ஜுபைர் அன்சாரியின் முழு பின்னணியையும் விசாரித்து வருகின்றனர். அவர் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார். அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளிப்படும் என்று சொல்லப்படுகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…