மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா பெதியா கிராமத்தில் உள்ள ஒரு மதரஸாவில் சோதனை நடத்தப்பட்டபோது , மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்த மௌலானா ஜுபைர் அன்சாரி இந்த அறையில் வசித்து வந்தார். இதனையடுத்து ஜுபைர் அன்சாரி கைது செய்யப்பட்டார். காண்ட்வாவில் அடுத்தடுத்த சோதனைகள் நடத்தப்பட்டன, மேலும் அங்கு ஒரு பெரிய அளவிலான பணப் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
மௌலானா வசித்த அறை மேல் மாடியில் இருந்தது. இதனால் அவர் கிராமத்து குழந்தைகளையும் மக்களையும் பயமுறுத்துவாராம். கூரையில் ஏறாதீர்கள், அங்கு பேய்கள் அங்கு வாழ்கின்றன என்று. இந்த பயத்தின் காரணமாக, யாரும் அங்கு செல்லவில்லை. அவர் தனது ரகசிய அறையை நாணய அச்சிடும் தொழிற்சாலையாக மாற்றியிருந்தார். இங்கிருந்து, மௌலானா வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நாணயத்தாள்களை வழங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, காண்ட்வா போலீசார் மௌலானா ஜுபைர் அன்சாரியின் முழு பின்னணியையும் விசாரித்து வருகின்றனர். அவர் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார். அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளிப்படும் என்று சொல்லப்படுகிறது.
