பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லலிதா தேவி என்பவர் சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் பாரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவர் ஏற்கனவே பத்ரிநாத், கேதர்நாத் உள்ளிட்ட நான்கு புனிதத் தலங்களுக்கும் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் யாத்திரை சென்று வந்துள்ளார். இந்நிலையில், தென்னகப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றிற்கு வழிபடச் சென்றபோது, அங்கிருந்த பூசாரிகள் அவரை உள்ளே அனுமதிக்காமல், “இங்கு நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, உடனடியாக இடத்தை விட்டு வெளியேறுங்கள்” எனக் கூறி விரட்டியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடவுளுக்குச் சொந்தமான கோவிலில் பக்தர்களை அனுமதிக்காமல் பூசாரிகள் அதிகாரம் செலுத்துவது சரியா என இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், சனாதன தர்மப் பயணம் மேற்கொள்ளும் ஒரு பெண் பக்தருக்குக் கோவிலில் நேர்ந்த இந்த அவமானகரமான நிகழ்வு இணையத்தில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
