மைக்ரோசிப்களின் கடும் தட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில் தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிரடியாக உயரும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, மைக்ரோசிப்களின் விலை வரும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 120 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான சூழலால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், மின்னணு சாதன நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் லாபத்தைப் பாதுகாக்க தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை குறைக்கத் தொடங்கிவிட்டன, இது சாமானிய மக்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை இந்த விலை உயர்வு ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இதன் தாக்கம் காரணமாக வரும் மாதங்களில் செல்போன் விற்பனை 10 முதல் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து முன்னணி பிராண்டுகளும் தங்களின் அதிகாரப்பூர்வ விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளன. எனவே, நுகர்வோர் தங்களுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை இப்போதே வாங்குவது லாபகரமாக இருக்கும் என்றும், காலம் தாழ்த்தினால் கூடுதல் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும் என்றும் சந்தை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…