உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பட்டி கும்ஹாரா கிராமத்தில், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான யாசூல் மற்றும் 18 வயதான முஸ்கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் முஸ்கான் திருமணக் கோலத்தில் மணப்பெண் அலங்காரத்தில் இருந்த நிலையில், இருவரும் ஊரின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டின் அருகே இருந்த மரத்தில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த இருவரும் காதலித்து வந்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கும் நிலையில், இருவரின் குடும்பத்தினரும் இக்காதல் விவகாரத்தை மறுத்து வருகின்றனர். மதம் கடந்த இக்காதல் விவகாரம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…