அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல என்.பி.சி (NBC) செய்தி நிறுவனத்தின் ‘மீட் தி பிரஸ்’ (Meet the Press) நிகழ்ச்சிக்காகத் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கருக்கு நேர்காணல் அளித்தார். விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இந்த நேர்காணல் நடைபெற்றது. ஆரம்பத்தில் சுமுகமாகச் சென்ற இந்த நேர்காணல், கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடுகள் மற்றும் கலிபோர்னியா தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம் குறித்த விவாதமாக மாறியபோது கடுமையான வாக்குவாதமாக வெடித்தது.
தேர்தல் முறைகேடுகள் குறித்து டிரம்ப் முன்வைத்த புகார்களுக்குத் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர் தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டார். இதனால் கடும் கோபமடைந்த டிரம்ப், “ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன, நீ அதைப் பார்க்க மறுக்கிறாய்” என்று காரசாரமாக வாதிட்டார். மேலும், அமெரிக்க ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், தொகுப்பாளரைப் பார்த்து, “நீ ஒன்னு ஊழல்வாதியாக இருக்க வேண்டும் அல்லது முட்டாளாக இருக்க வேண்டும்” என்று அநாகரிகமாக விமர்சித்தார்.
வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டியபோது, “இந்த நேர்காணலை இத்துடன் முடித்துக் கொள்வோம், எனக்கு இது போதும்” என்று கூறிய டிரம்ப், தனது சட்டையில் இருந்த மைக்ரோபோனைக் கழற்றி எறிந்துவிட்டு பாதியிலேயே நேர்காணல் அரங்கில் இருந்து வெளியேறினார். கிறிஸ்டன் வெல்கர் எவ்வளவோ தடுத்தும் டிரம்ப் அதை ஏற்கவில்லை. அமெரிக்க அதிபர் ஒருவர் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், நேரடி நேர்காணலில் இருந்து பாதியில் கோபத்துடன் வெளியேறிய இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பையும், ஊடக சுதந்திரம் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…