“இவ்வளவு நாள் தப்பு பண்ணிட்டோமோ?” – மேடையிலேயே கண்கலங்கிய பிரேமலதா…. திமுகவினரைக் கவர்ந்த ‘அந்த’ ஒரு விஷயம்….!

Spread the love

தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தேமுதிக முதல்முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்தத் தேர்தலில் தேமுதிகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (ராஜ்ய சபா) சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் எல்.கே.சுதீஷ் எம்பியாகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில், கடலூர் பகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இவ்வளவு ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி அமையவில்லையே என்று உண்மையாகவே நான் இப்போது வருத்தப்படுகிறேன்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.

கடந்த காலங்களில் தவறான கூட்டணிகளில் இருந்துவிட்டோமோ என்ற எண்ணம் தற்போது மேலோங்குவதாகப் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ள அவர், ஈபிஎஸ் மீதான அரசியல் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளார். மாறாக, திமுக கூட்டணியில் தங்களுக்குக் கிடைத்துள்ள மதிப்பும், ஒருங்கிணைப்பும் தேமுதிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும், தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கும் இடையிலான ஆழமான நட்பை பிரேமலதா நன்றியுடன் நினைவு கூர்ந்தார். “விஜயகாந்த் மீது கலைஞர் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்; ஒரு அப்பாயின்ட்மென்ட் கேட்டால் உடனடியாகக் கிடைக்கும், எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் காலை 6 மணிக்கே நேரடியாக கேப்டனிடம் பேசும் பழக்கம் கலைஞருக்கு இருந்தது,” என்று அவர் குறிப்பிட்டார். மேலிருந்து இந்த இரு தெய்வங்களும் ஆசீர்வதிப்பதால்தான், இன்று இரு குடும்பங்களுக்கு இடையிலான உறவு, அரசியல் கூட்டணி உறவாக மாறியுள்ளதாக அவர் நெகிழ்ந்தார்.

தனது தேர்தல் களம் குறித்துப் பேசிய பிரேமலதா, தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் தன்னைப் போட்டியிட வற்புறுத்திய போதிலும், தான் ஏன் விருத்தாசலத்தைத் தேர்வு செய்தேன் என்பதைத் தொண்டர்களே அறிவார்கள் என்று கூறினார். தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக அவர் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம், திமுகவினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வரும் பிரேமலதா, இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

9 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

22 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

27 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

32 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

36 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

41 minutes ago