திடீர் டுவிஸ்ட்..! யாரோடு கூட்டணி..? சூசகமாக அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்…!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், இது மக்களை நேசிக்கும் மற்றும் மக்களுக்காகப் போராடும் கட்சி என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மறைந்த தலைவர் விஜயகாந்த் தேமுதிகவின் கோட்டை போன்றவர் என்றும், அவரைப் போலவே கட்சியின் தொண்டர்களும் மிகுந்த தைரியசாலிகள் என்றும் அவர் புகழ்ந்து பேசினார்.

எதிர்வரும் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்துப் பேசிய அவர், மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், வரும் காலங்களில் கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அந்த மாநாட்டில் வலியுறுத்தினார்.