அடுத்த அதிர்ச்சி… ஒன்றரை வயதில் குழந்தை, நிறைமாத வயிற்றுடன் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை… வரதட்சணை கொடுமையால் நேர்ந்த சோகம்…!

By Divyamayakannan on ஆவணி 29, 2025

Spread the love

கர்நாடக, பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியை சேர்ந்த பிரவீன். அவருக்கு மனைவி ஷில்பா (27) மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார். கணவன் மனைவி இருவருமே ஐடி நிறுவன ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். திருமணத்தின் போது வரதட்சணையாக ரூபாய் 50 லட்சம் ரொக்க பணமாக ஷில்பாவின் குடும்பத்தினர் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு பானிபூரி உணவக கடையை தொடங்கினார் பிரவீன்.

வரதட்சணையாய் வாங்கின 50 லட்சம் போதாது என்று தொழில் தொடங்க மறுபடியும் பணம்கேட்டுத் தொல்லை செய்து வந்துள்ளார் மனைவியை. அதனால் மீண்டும் ரூபாய் 10 லட்சம் ஷில்பாவின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். அதுபோதாது என்று மீண்டும் பணம் கேட்டு ஷில்பாவை தொல்லை செய்துள்ளார். அதனால் சில்பா கோபித்துக் கொண்டு அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரவீனின் பெற்றோர்கள் ஷில்பாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.  இருப்பினும் தொடர்ந்து பணம் கேட்டு ஷில்பாவை பிரவீன் தொல்லை செய்து வந்துள்ளார்.

   

இதனால் மனமுடைந்த ஷில்பா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தெரிந்த விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீனின் தாய் சாந்தா மற்றும் தங்கை பிரியா ஆகிய இருவரையும் கைதுச் செய்துள்ளனர். தலைமறைவான பிரவீனை தேடிப்பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி.