பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ: தமிழகத்தில் மட்டும் பரவுவது எப்படி…? காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி..!!

By Soundarya on ஆவணி 29, 2025

Spread the love

பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில் இது போன்ற அந்தரங்க வீடியோக்களை முடக்கம் செய்தாலும் தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் பரவுகிறது? என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி அனுப்பியுள்ளது. பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆண் நண்பரோடு காதல் வயப்பட்டபோது அவரோட நெருக்கமாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டது. அதை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார் .இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தமிழகத்தில் இன்னும் மூன்று இணையத்தில் பரவி வருகிறது.

புதிதாக ஒரு லிங்க் எனப்படும் வீடியோ பரவி வருகிறது. நீதிபதி வீடியோக்களை நீக்க உத்தரவிட்ட நிலையில் மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இந்த வீடியோக்களை பார்க்க முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது? ஆபாசமான வீடியோக்கள் மட்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவரின் கண்ணியம் சம்பந்தப்பட்டுள்ளது என்பதால் மீண்டும் மீண்டும் பரவி வரும் பெண் வழக்கறிஞரின் வீடியோக்கள் இடம் பெற்ற நான்கு இணையதள லிங்குகளை முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.