#image_title
90ஸ் காலகட்டத்தில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பிரசாந்த் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து ஜீன்ஸ், வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித்தை காட்டிலும் பிரசாந்த் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகம். ஆனால் அடுத்தடுத்து சினிமாவில் சறுக்கல்களை சந்தித்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் GOAT திரைப்படத்திலும் பிரசாந்த் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படம் மூலம் மீண்டும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார் கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் அந்தாதூன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, வனிதா, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2022 ஆம் ஆண்டு முடிவடைந்தது.
ஆனால் ஒரு சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்று அந்தகன் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. பார்வையற்றவராக இருக்கும் பிரசாந்த் எப்படியாவது லண்டன் சென்று பியானோ கலைஞராக வேண்டும் என ஆசைப்படுகிறார். இதற்கிடையே பிரசாந்துக்கு காதலி கிடைக்கிறார். காதலி வந்த பிறகு வாழ்வில் நடக்கக்கூடிய அடுத்தடுத்த சம்பவங்களை படத்தில் விறுவிறுப்பாக காட்டியுள்ளனர்.
இதுவரை படம் பார்த்த பலரும் அந்தகன் படம் சூப்பராக இருக்கிறது என கூறியுள்ளனர். சென்டிமென்ட், ஆக்சன் காட்சிகள் நிறைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அந்தகன் திரைப்படம் உள்ளது. பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகி சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் ஆகிய மூன்று விருதுகளையும் அந்தாதூன் திரைப்படம் தட்டி தூக்கியது. அப்படி இருக்க தமிழில் அந்தகன் திரைப்படம் பிரசாந்த்துக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#image_title
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…