மண்ணை கவ்விய கிங் மேக்கர்… அரசியலை விட்டு விலகுவாரா..? சொன்ன வாக்கை காப்பாற்றுவாரா..? பெரும் எதிர்பார்ப்பு..!!

Spread the love

தேர்வு வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் கிங் மேக்கர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர்  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்திருக்கிறார். இவருடைய வியூகத்தின் மூலம் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளனர். 2012 ஆம் வருடம் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடி வெற்றி பெற்று முதல் மந்திரியாக வியூகம் அமைத்துக் கொடுத்தவர் இவர்தான். தமிழ்நாட்டிலும் 2021 ஆம் வருடம் திமுக ஆட்சி அமைப்பதற்கு இவருடைய தேர்தல் வியூகம் தான் காரணம். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவு எடுத்த அவர் மொத்தம் 243 தொகுதிகளில் 238 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 150 தொகுதியில் ஒன்று குறைந்தாலும் அது தோல்விதான் என்றும் கூறியிருந்தார். கடைசியில் பெரும் நம்பிக்கையோடு இருந்த நேரத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தது. மேலும் பிரசாந்த் கிஷோர் தலைமையான ஜன் சுராஜ் கட்சிக்கு இரண்டு முதல் ஐந்து தொகுதிகள் வரையே கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

கருத்துக்கணிப்பு முடிவால் கொந்தளித்த பிரசாந்த் கிஷோர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது அவ்வாறு நடந்துவிட்டால் நான் அரசியலை விட்டு விலகுவேன் என்று சவால் விட்டார். ஆனால் பீகார் சட்டசபை தேர்தல் முடிவு கருத்துக்கணிப்பில் வெளிவந்தது போலவே அமைந்துவிட்டது. பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சுராஜ் கட்சிக்கு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது போல ஒன்று இரண்டு தொகுதிகள் கூட கிடைக்காமல் போய்விட்டது. தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் கிங் மேக்கராக  பிரஷாந்த் கிஷோர் தேர்தலில் மண்ணை கவி விட்டார். இனி சவாலின் போது தான் கொடுத்த வாக்குறுதிகள் அரசியல் விட்டு விலகுவதாக கூறியதை நிறைவேற்றுவாரா? என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

30 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

40 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

48 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

56 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

60 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

1 மணத்தியாலம் ago