பிலிப்பைன்ஸ் நாட்டில் இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரிட்டர் அளவுகோலில் 6.9, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. போஹோல் மாகாணத்தில் முதல் நிலநடுக்கத்தின் மையம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் 33 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் லெய்ட், செபு மற்றும் பிலிரான் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த எந்த விவரங்களும் வெளியாகாத நிலையில் நிலநடுக்கத்தால் பன்டாயன் பகுதியில் உள்ள ஒரு தேவாலயம் இடிந்து விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Video of the M6.9 earthquake hitting Bantayan, Philippines…😱
📹 Photoholic Island/fb pic.twitter.com/Nm2K2tJ2wz
— Volcaholic 🌋 (@volcaholic1) September 30, 2025
