பெற்றோர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் நாளை (அக்.2) பள்ளிகள் திறப்பு… அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 1, 2025

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அதன்படி அக்டோபர் 2 நாளை விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் தொடர்பாக எமிஸ் தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 6 பள்ளிகள் திறக்கப்படும்