அடக்கொடுமையே… மாதம் ரூ.80,000 சம்பளம் வாங்கிட்டு கணக்கு தெரியாமல் திணறும் டீச்சர்… அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 1, 2025

Spread the love

பீகார் மாநிலத்தில் இருந்து வெளியாகி உள்ள ஒரு வீடியோ கிராமப்புற கல்வி தரம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு ஆண்கள் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையிடம் எளிய கணக்கு வினாவை மாணவர் கேட்கிறார். அந்த ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறதாக தெரிகிறது. அதேபோல அவர் அந்த கணக்கு வினாவை தீர்க்க முடியாமல் தடுமாறுகின்றார். ஒவ்வொரு முறையும் தவறு செய்யும்போது ஆண் அதை சுட்டி காட்டினாலும் ஆசிரியர் மீண்டும் அதே தவறுகளை தொடர்ந்து செய்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது இந்தியாவில் உள்ள பல அரசு பள்ளிகளிலும் நடைபெறுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தகுதியற்றவர்கள் பெரிய சம்பளம் வாங்கினாலும் அடிப்படை கல்வி அறிவு இல்லாமல் பணியாற்றி வருவதாக இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ அரசு பள்ளிகளில் கல்வியின் தரம், ஆசிரியர்களின் தகுதி மற்றும் வேலை நியமன முறைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் இதை குறைவான கல்வித்தரம் குறித்த ஒரு கவலை அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டு என்று மதிப்பீடு செய்கிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.