பிலிப்பைன்ஸ் நாட்டில் நள்ளிரவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்தனர். அதேபோல மக்களின் உடமைகளும் கடும் சேதத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
