தினமும் ரூ.222 செலுத்தினால் போதும்…! ரூ.11 லட்சம் ரிட்டர்ன் கிடைக்கும்… அதிக லாபம் தரும் போலீஸ் ஆபிஸின் சூப்பர் திட்டம்…!!

Spread the love

தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit – RD) என்பது பாதுகாப்பானதும், அரசின் உத்தரவாதம் பெற்றதுமான ஒரு பிரபலமான சிறுசேமிப்புத் திட்டமாகும். இந்தக் கணக்கைத் தொடங்க வெறும் ₹100 இருந்தாலே போதும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையைச் சேமிப்பதன் மூலம், முதிர்வின்போது கணிசமான வட்டியுடன் கூடிய பெரிய தொகையைப் பெறலாம்.

தற்போது, அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு 6.70% வட்டி விகிதம் வழங்குகிறது. உதாரணமாக, ஒருவர் தினமும் ₹333 சேமிக்க ஆரம்பித்தால் (மாதம் ₹10,000), 10 வருடங்கள் முடிவில், மொத்தச் சேமிப்பான ₹12 லட்சத்துடன், வட்டியாகச் சுமார் ₹5,08,546 சேர்ந்து, மொத்தமாக ₹17,08,546 வரை கிடைக்கும்.

இதேபோல், தினமும் ₹222 சேமித்தால் (மாதம் ₹6,660), 10 வருடங்களின் முடிவில் சுமார் ₹11,37,891 வரை பெற முடியும். இந்த RD திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, கணக்கைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குக் கொண்டு சென்றால், டெபாசிட் செய்த தொகையில் 50% வரை கடனாகப் பெறலாம். இந்தக் கடனுக்குக் கூடுதலாக 2% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

இந்த RD திட்டத்தை ஒரு நபர் தன் பெயரிலோ, குழந்தைகளுக்கோ, மூத்த குடிமக்களுக்கோ அல்லது பெற்றோர், குழந்தைகள் சேர்ந்தும் கூட்டுக் கணக்காகவும் (Joint Account) தொடங்கலாம். இந்தச் சேமிப்புக் காலம் பொதுவாக 5 வருடங்கள் என்றாலும், மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்கும் வசதியும் இதில் உள்ளது. ஆனால், மாதாந்திரத் தவணையைச் செலுத்தத் தவறினால், மாதத்திற்கு 1% அபராதம் விதிக்கப்படும்; தொடர்ந்து 4 தவணைகள் தவறினால் கணக்கு மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

9 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

12 minutes ago

“2 பிள்ளைகளின் தந்தை…” வேலைக்கு வந்த இளம்பெண்ணை விடாமல்…! போட்டோவை பார்த்து ஷாக்கான காதலன்… பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…

20 minutes ago

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

40 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… என் மானத்தை காப்பாத்த இதான் வழி… சாதி வெறியால் தூங்கிக் கொண்டிருந்த… 17 வயது மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை… ஆக்ராவில் பகீர் சம்பவம்…!

ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…

40 minutes ago