கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், அம்ருதஹள்ளியைச் சேர்ந்த ராஜ் என்ற திருடன், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இந்நிலையில், ஒருநாள் இரவு மண்டூரில் தான் ஏற்கனவே நோட்டமிட்டிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று, அங்கிருந்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கம் ஆகியவற்றைத் திருடினான்.
திருடிய நகைகளுடன் ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாடு பகுதிக்கு வந்தபோது, அங்கே திடீரென 4 இளைஞர்கள் கொண்ட கும்பல் ராஜை வழிமறித்து மிரட்டியுள்ளனர். அந்த இளைஞர்கள் ராஜை சோதனையிட்டு, அவனிடம் இருந்த தங்கம் மற்றும் பணத்தைக் கண்டுபிடித்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.
தான் ஒரு திருடன் என்று ராஜ் சொன்னபோதும், அந்தக் கும்பல் அவனுக்குச் செலவுக்கு ரூ.3,000 மட்டும் கொடுத்து அனுப்பிவைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜ், அங்கிருந்த மேலும் 2 வீடுகளில் புகுந்து 120 கிராம் தங்கம் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடினான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டு உரிமையாளர்கள் புகார் அளித்ததன் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ராஜைக் கைது செய்தனர். அவனிடமிருந்து 110 கிராம் தங்கம் மற்றும் ரூ.28,000 ரொக்கத்தைக் கைப்பற்றினர். ராஜிடம் திருடிய ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…