திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பூங்குளம் பகுதியில் அமைந்திருக்கும் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்மலை முருகன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலுக்குச் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 32 கிராம மக்கள் திரண்டு வந்து காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல் எனத் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோயில் அமைந்திருக்கும் இடம் மற்றும் கோயில் நிர்வாக உரிமை தங்களுக்குத்தான் சொந்தம் என அப்பகுதியைச் சேர்ந்த பிச்சியம்மாள் மற்றும் அவரது மகள் கலைச்செல்வி ஆகியோர் உரிமைக் கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தற்போது வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆடி கிருத்திகைத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஊர் பொதுமக்கள் சார்பில் வருவாய்த்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தநிலையில், நேற்று பிச்சியம்மாளும் அவரது மகள் கலைச்செல்வியும் திடீரென கோயில் கேட்டைப் பூட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனையும் தாண்டி, கலைச்செல்வி திடீரென தனது தலையில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தோரை உரைய வைத்தது. உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அருகிலிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதன்பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை தனது கழுத்தில் அணிந்துகொண்டு கோயிலின் அருகே அமர்ந்த கலைச்செல்வி, “விஜய் அண்ணா, உங்கள் கட்சியிலிருக்கும் சகோதரியான எனக்கு உதவி செய்யுங்கள்; அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு திருவிழாவிற்கு அனுமதி அளித்துள்ளனர்” எனக் கண்ணீர் மல்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மாவட்டம் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித தீர்வும் கிடைக்காததால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதில் தலையிட்டுத் தங்களுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, திருவிழா ஏற்பாடுகளால் பூட்டுப் போடப்பட்டு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…
தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த விஜய் மோகன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த…
தமிழக சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5 அன்று…
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி திமுகவில் பறிக்கப்பட்டதற்குப் பின்னால், ஈரோடு அரசியலில் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து மனு மீதான விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்…
தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் வரி மூலமாக கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி…