ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் பொற்கொல்லராக வேலை பார்க்கும் 35 வயது மதிக்கத்தக்க சுப்பிரமணியம் என்பவர், தனது ஏழு வயது சொந்த மகளுக்கே பாலியல் தொந்தரவு அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உதவி மையத்திற்கு வந்த தொலைபேசித் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதன்பிறகு, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் உதவி மையத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சிறுமியின் தந்தையான சுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சொந்த தந்தையே மகளிடம் அத்துமீறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், காவல்துறை தரப்பில் இது குறித்த அடுத்தகட்ட விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசியலில் அரங்கேறி வரும் அண்மைக்கால நகர்வுகள் மற்றும் கூட்டங்கள் அனைத்தும், எதிர்வரும் தேர்தல் களத்திற்கான ஒரு புதிய கூட்டணிக்கான…
ஆந்திர மாநிலம் நந்திகாம மண்டலத்திற்குட்பட்ட ஐதவரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (18) என்ற மாணவி, கங்கினாடப்பில் செயல்பட்டு வரும் சரத்…
வட துருவப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள நார்வே நாட்டின் லாங்கியர்பியன் என்ற நகரத்தில், மனிதர்கள் இறப்பதற்கும் உடல்களைப் புதைப்பதற்கும்…
தமிழக அரசு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரூ.10 விலையில்…
அமெரிக்காவில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் ஆரம்பக் கல்விக்கான கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வாரத்தில் 2 நாட்கள்…
மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பாலாப்பூரைச் சேர்ந்த விவசாயியான மல்லேஷ் தேபேகர், தனது தோட்டத்தில் விளைந்த கொண்டைக்கடலையை அறுவடை செய்து…