தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொங்கல் பரிசாக 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் .
