விருதுநகரில் போலீஸ்காரர் ஒருவர், கைம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலரே, ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் விருதுநகரில் தையல் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவருக்கு, ஆமத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சுந்தர்ராஜ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுந்தர்ராஜ், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் பழகியுள்ளார். அவ்வாறு பழகும்போது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து பல்வேறு கட்டங்களாக சுந்தர்ராஜ் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் மகளை மருத்துவப் படிப்பில் சேர்த்து விடுவதாகக் கூறியும் அவர் பெரும் தொகையை வாங்கியதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சுந்தர்ராஜ் அந்தப் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததோடு, சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிடுவேன் என மீண்டும் மிரட்டியுள்ளார்.
தாளமுடியாத துன்பத்திற்கு ஆளான அந்தப் பெண், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீஸார், சுந்தர்ராஜ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இதே விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் சுந்தர்ராஜ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…