கைம்பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்த போலீஸ்காரர்…. கடைசியில் அந்த வீடியோவை காட்டி…. விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்….!

Spread the love

விருதுநகரில் போலீஸ்காரர் ஒருவர், கைம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலரே, ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் விருதுநகரில் தையல் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவருக்கு, ஆமத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சுந்தர்ராஜ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுந்தர்ராஜ், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் பழகியுள்ளார். அவ்வாறு பழகும்போது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து பல்வேறு கட்டங்களாக சுந்தர்ராஜ் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் மகளை மருத்துவப் படிப்பில் சேர்த்து விடுவதாகக் கூறியும் அவர் பெரும் தொகையை வாங்கியதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சுந்தர்ராஜ் அந்தப் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததோடு, சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிடுவேன் என மீண்டும் மிரட்டியுள்ளார்.

தாளமுடியாத துன்பத்திற்கு ஆளான அந்தப் பெண், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீஸார், சுந்தர்ராஜ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இதே விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் சுந்தர்ராஜ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

2 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

3 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

3 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

4 மணத்தியாலங்கள் ago