“என் பணத்தை கொடுங்க இல்லனா செத்துடுவேன்” லஞ்சம் வாங்கிய போலீஸ்… தற்கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி..வெளியான பகீர் பின்னணி..!!

Spread the love

அம்ரோஹா மாவட்டம் மங்கடா கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவர், காவல்துறையினரின் அலட்சியம் மற்றும் ஊழல் காரணமாகத் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது மனைவியிடம் மர்ம நபர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து அசோக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மாறாக, அசோக்கிற்கு எதிராகத் எதிர் தரப்பினர் அளித்த பொய்ப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அசோக் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாகக் கூறி, அங்கிருந்த உதவி ஆய்வாளர் (தரோகா) அசோக்கிடம் 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்துள்ளது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

நீதி கிடைக்க வேண்டிய இடத்தில் பணத்தையும் இழந்து, பொய் வழக்கிலும் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளான அசோக், “எனது பணத்தைத் திருப்பித் தராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என தரோகாவிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு சாமானிய மனிதன் காவல்துறையினரின் முறைகேடுகளால் தற்கொலை விளிம்பிற்குச் தள்ளப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

4 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

5 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

5 மணத்தியாலங்கள் ago