விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த அருண் (28), சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் (எஸ்.ஐ.) பணிபுரிகிறார். இவர் சிவகங்கை காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை (25) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் அருண் இருந்தபோது, தன் மனைவி இளவரசி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும். நான் செல்கிறேன்” என்று பதிவிட்டிருப்பதைப் பார்த்து பதற்றமடைந்தார்.
உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இளவரசி சேலையால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் காணப்பட்டார். காவல்துறையினர் உதவியுடன் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. திருமணமாகி 3 வருடங்களே ஆனதால், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் ஆகாததால், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தலைநகர் சென்னையில் உலகத் தரம்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும்…
மும்பை அருகே உள்ள விரார் பகுதியில் இயங்கி வரும் பிரபல 'பார்பிகியூ நேஷன்' உணவகத்திற்கு ஆகஸ்ட் 19 அன்று யாஷ்…
மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…