டியூட்டியில் இருந்த எஸ்.ஐ…! வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி… பதறிப் போய் ஓடி வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த அருண் (28), சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் (எஸ்.ஐ.) பணிபுரிகிறார். இவர் சிவகங்கை காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை (25) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் அருண் இருந்தபோது, தன் மனைவி இளவரசி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும். நான் செல்கிறேன்” என்று பதிவிட்டிருப்பதைப் பார்த்து பதற்றமடைந்தார்.

உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இளவரசி சேலையால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் காணப்பட்டார். காவல்துறையினர் உதவியுடன் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. திருமணமாகி 3 வருடங்களே ஆனதால், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் ஆகாததால், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Devi Ramu

Recent Posts

“விஜய் கொடுத்த அந்த ஒரு அனுமதி” என்னை அவர் கைவிடல… மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…

2 minutes ago

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

8 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

19 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

27 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

34 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

54 minutes ago