உத்தரப் பிரதேச மாநிலத்தில், வழக்கு ஒன்றில் தொடர்புடைய கணவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸ் படையினர், அங்கே தடுத்து நிறுத்த முயன்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, வயிற்றில் எட்டி மிதித்துக் கொன்ற பயங்கரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கணவரைப் போலிஸார் தர தரவென இழுத்துச் சென்றபோது, அவரைக் காப்பாற்ற ஓடிவந்த கர்ப்பிணிப் பெண்ணை, கொஞ்சமும் மனிதநேயமின்றி மிருகத்தனமாக மிதித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண், வயிற்றில் வளர்ந்த பிஞ்சுக் குழந்தையோடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்த செய்தி மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “மனிதநேயற்ற முறையில் நடந்துகொண்ட போலிஸார் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் 'புருஷன்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…
பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதற்குள்ளாகவே செங்கோட்டையன் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில்…
தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் நோக்கில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும்…
தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர…
நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ளது பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை…