தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் சுவரூப் நகர் பகுதியில் உள்ள குஷக் சாலை அருகே, கடந்த செப்டம்பர் 13 அன்று அழுகிய நிலையில் அச்சிறுமியின் சடலத்தை காவல்துறை மீட்டது. விசாரணையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தனது 17 வயது நண்பரைச் சந்திக்கச் சென்ற அந்தச் சிறுமி, டெம்போ வாகனம் ஒன்றிற்குள் வைத்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் ஆறு முறைக்கும் மேல் கத்தியால் குத்தப்பட்டு புதரில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, 72 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்குரிய டெம்போ வாகனத்தை அடையாளம் கண்டு 19 வயதான சிவம் என்பவரையும், 3 சிறுவர்களையும் கைது செய்தனர். மேலும், இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகளையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…
பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…
சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் "மாவீரர் மக்கள் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியின் தொடக்க விழா எழுச்சியுடன்…