BREAKING: அதிமுகவுக்கு ஷாக்… இபிஎஸ்-க்கு திடீர் அனுமதி மறுப்பு…!!!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இதரிடையே நாளை திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், நாளை மறுநாள் நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரிலும் ரோடு ஷோ செல்ல இபிஎஸ் திட்டமிட்டு இருந்தார். தற்போது கரூர் துயர வழக்கில் நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்க கூடாது என ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி இபிஎஸ் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பரப்புரை கூட்டத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.