“உதயநிதி கைதில் வன்முறை…” திமுக தொண்டரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய போலீஸ்… குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்ட நிர்வாகிகள்… பரபரப்பில் அரசியல் களம்…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்குச் சென்று தஞ்சாவூர் போலீசார் அவரைக் கைது செய்தனர். இக்கைது நடவடிக்கைக்கு அங்கிருந்த திமுக வழக்கறிஞர்களும் முன்னாள் அமைச்சர்களும் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டனர். எதிர்ப்புகளையும் மீறிப் போலீசார் உதயநிதியை வாகனத்தில் ஏற்றித் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, தொண்டர்கள் வாகனத்தின் குறுக்கே படுத்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வாகனத்தை வழிமறித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகக் கலைத்து அப்புறப்படுத்த முயன்றபோது அங்குப் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் மோதலின் போது திமுக தொண்டர் ஒருவர் முகத்தில் ரத்தம் சொட்டச் சொட்டக் காயமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலிஸார் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டிய அந்த நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.