“மது போதையில் பெண்களை வம்பிழுத்து அட்ராசிட்டி…” வாலிபரை அடித்து தரதரவென இழுத்து சென்ற போலீசார்… சுற்றுலா இடத்தில் அராஜகம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

மகாராஷ்டிராவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களான த்ரிம்பகேஷ்வர் மற்றும் பஹினே ஆகிய பகுதிகளில் மழைக்காலத்தைக் கொண்டாடும் சாக்கில் இளைஞர்கள் பலர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அப்பகுதிக்கு வரும் சிலர், பகிரங்கமாக மது அருந்துவது, பொது இடங்களில் கூச்சலிடுவது மற்றும் அவ்வழியாகச் செல்லும் பெண்களிடம் வம்பு இழுத்து அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்த வாலிபர்களை விரட்டியடித்துக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டத்தைக் கலைத்தனர். மழைக்காலத்தில் இங்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் கூடுதல் போலீசாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பயணிகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.