பாமகவின் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்த அவர் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கிராமங்களை நோக்கி என்ற பெயரில் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய ராமதாஸ், பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய மும்மூர்த்திகள் தன்னிடம் வந்து என்ன வேண்டும் என்று கேட்டால் தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் இருக்கக் கூடாது என கேட்பேன். தனக்கு பதவி என்பது முக்கியமில்லை. நான் நினைத்திருந்தால் ஜனாதிபதி ஆகி இருக்க முடியும். எல்லா பிரதமர்களும் தனது நண்பர்கள் என்றும் பிரதமர் மோடி தமிழகம் வந்தால் தன்னை கட்டி அணைத்துக் கொள்வார் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ள.
தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என குறிப்பிட்ட ராமதாஸ், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசுக்கு காலக்கெடு நிறைவடைந்த நிலையில் இதுவரை அன்புமணி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த சமயத்தில் ராமதாஸ் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருப்பது பாமகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…
புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…
சமூக வலைதளங்களில் ஒரு பள்ளிச் சிறுமி தனது ஆசிரியையிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை…