இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலானது வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று திமுகவுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கு பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் பிரேமலதா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் CP ராதாகிருஷ்ணன் நல்ல தேர்வு என ராமதாஸ் கூறியுள்ள நிலையில், தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வர அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரேமலதா கூறியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் அவர்கள் NDA அணியில் இணைவதற்கான அச்சாரம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…