தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொண்டார். வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் தொடங்கிய இந்த ஊர்வலத்தில், பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒரே வாகனத்தில் பயணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி அண்ணா சிலை வரை சுமார் 1.5 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த ரோடு ஷோவில், சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டிருந்தனர். பிரதமர் மோடியைக் கண்ட உற்சாகத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்ட பொதுமக்கள், மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாகனத்தில் இருந்த பிரதமர் மோடியும், அண்ணாமலையை அருகில் வருமாறு அழைத்து தொண்டர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ரோடு ஷோவின் முடிவில் வடசேரி அண்ணா சிலைக்கு அருகே வாகனம் நின்றபோது ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது. பரப்புரை வாகனத்தில் இருந்து மற்ற தலைவர்கள் இறங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் தொண்டர்களை நோக்கி கை அசைத்தபடி நின்றிருந்தனர். அப்போது பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியைத் தொட்டு, “கீழே இறங்குங்கள்” என்று ஜாடை காட்டி அறிவுறுத்தினார். பிரதமரின் இந்தச் செயலையடுத்து எடப்பாடி பழனிசாமி கீழே இறங்க, அவரைத் தொடர்ந்து மோடியும் மற்ற நிர்வாகிகளும் வாகனத்தில் இருந்து இறங்கி அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட வேட்பாளர்களைப் பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்ற பிரதமர், அங்கிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். வரும் 18-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மீண்டும் பங்கேற்க உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…