நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு இதுவரை 20 தவணை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 21 வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் 21 வது தவணை 2000 ரூபாயை தீபாவளிக்கு முன்னதாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகள் மற்றும் ஒரே குடும்பத்தில் பல பயனாளிகள் இருந்தால் வெரிஃபிகேஷன் முடியும் வரை அவர்களுக்கு பணம் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி எம் கிசான் இணையதளம் அல்லது செயலியில் Know your status சென்று தகுதி நிலையை சரி பார்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…