விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000.. உடனே இதை செக் பண்ணுங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 19, 2025

Spread the love

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதே சமயம் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே அரசின் நிதி உதவி சென்றடைய வேண்டும் என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் பல விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 20- வது தவணைக்கான தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் செய்யும் சிறு தவறும் உங்களுக்கு பணம் கிடைக்காமல் செய்துவிடலாம். ஆகவே வங்கி கணக்குடன் ஆதார இணைப்பதுடன் கட்டாயம் e-Kyc செய்திருக்க வேண்டும். தவறான IFSC Code, நில உரிமையில் குளறுபடி இருந்தால் பணம் கிடைக்காது. எனவே பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.