தமிழகத்தில் பொதுவாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டத்திற்கு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடு செய்ய ஜூலை 26 ஆம் தேதி 14 ஆக இருக்கும் என அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஜூலை 24ஆம் தேதி குமரி மாவட்டத்திலும் ஜூலை 28ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
