Categories: சினிமா

குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட வனிதா-லட்சுமி… நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்து என்ன ரியாக்ஷன் கொடுத்தார்கள் தெரியுமா..?

Spread the love

நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மகள். கடந்த 1995-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மாணிக்கம், காக்கை சிறகினிலே, நான் ராஜாவாகப் போகிறேன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு வனிதாவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் வனிதா போட்டியாளராக பங்கேற்றார். முதன் முதலில் கடந்த 2000-ஆம் ஆண்டு ஆகாஷை வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். கடந்த 2006- ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பின்னர் கடந்து 2007-ஆம் ஆண்டு தொழிலதிபரான ஆனந்தராஜ் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார்.

அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2012-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு ஜோதிகா, ஜெய்னிகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த உறவும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பிரபல நடிகையான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தது குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது. சோசியல் மீடியாவில் வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டனர். இத்தனை வருடங்களுக்கு பிறகு வனிதாவும் லட்சுமியும் மீண்டும் சந்தித்தனர். அதாவது சுகன் இயக்கத்தில் பிதா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தில் அனு, ஆதேஷ் பாலா உள்ளிட்ட முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வனிதாவும் லட்சுமியும் பார்த்துக் கொண்டனர். அப்போது வனிதா லட்சுமி அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகே சென்று உட்கார்ந்து ஹாய் என கூறினார். சிறிது நேரத்தில் வனிதா அந்த நாற்காலியில் இருந்து எழுந்து மற்றொரு நாட்களில் உட்கார்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

32 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

32 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

42 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

52 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

54 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

1 மணத்தியாலம் ago