நாமக்கல் ஐந்துபனை பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் புகைப்பட கலைஞராவார். இவர் தன்னுடைய நண்பர்களான தினேஷ் மற்றும் ஹரி என்பவர் உடன் இணைந்து குறும்படம் தயாரித்து வருகின்றார். இதற்காக அவர்களிடமே நந்தகோபால் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகையை கேட்டு நண்பர்கள் இருவரும் தினமும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். தொடர்ந்து கடன் தொகையை கிட்னியை விற்றாவது அடைக்க வேண்டும் என அவர்கள் நந்தகோபாலை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த நந்தகோபால் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்கொலை செய்து கொண்டவரிடம் தினேஷ் என்பவர் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிட்னியை விற்றாவது பணத்தை தா…#Theekkathir | #Namakkal | #suicide pic.twitter.com/9sJfNKeSC7
— Theekkathir (@Theekkathir) November 13, 2025
