விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் ரோபோடிக் கபே அமைக்கப்பட்டது. இந்நிலையில் ரோபோ 40 வினாடிகளில் 4 வகை டீ, காபிகளைத் தயாரித்து வழங்கியது. அதனை குடித்து பார்த்து வாடிக்கையாளர்கள் ருசியைப் பாராட்டினர். அந்த கடைகளில் மாஸ்டர்கள் தேவையில்லை என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
விமான நிலையங்கள், ஐடி பூங்காக்கள், மால்கள், சுற்றுலாத் தலங்களில் 100 சதுர அடியில் ரோபோ ஸ்டால் அமைக்கலாம் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து இதைத் தயாரித்துள்ளனர். இதனால் விருப்பப்படி காபி கிடைக்கும். இதனையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விளக்க காத்திருப்பதாக கூறியுள்ளனர்.
