பர்சனல் லோன் வாங்க போறீங்களா…? எந்த வங்கியில் குறைந்த வட்டி…? இதை கண்டிப்பா தெரிஞ்சி வச்சிக்கோங்க….!!

Spread the love

இந்தியாவில் தனிநபர் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகப் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் மாதாந்திரத் தவணை (EMI) விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, குறைந்தபட்சமாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 8.75 சதவீத வட்டியிலும், ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் போன்ற வங்கிகள் 9.99 சதவீத வட்டியிலிருந்தும் கடன்களை வழங்குகின்றன.

நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை ஐந்து ஆண்டுகள் கால வரம்பில் கடனாகப் பெற்றால், வட்டி விகிதத்தைப் பொறுத்து சுமார் 2,064 ரூபாய் முதல் 3,297 ரூபாய் வரை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டியிருக்கும். கனரா வங்கி மற்றும் பஞ்சாப் சிந்த் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும் 10 சதவீதத்திற்குள்ளான வட்டி விகிதத்தில் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.

அதே சமயம், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ போன்ற பெரிய வங்கிகள் 10 சதவீதத்திற்கு மேலான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன. பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்து 31 சதவீதம் வரை கூட வட்டி வசூலிக்கின்றன. ஒவ்வொரு வங்கியும் நிர்வாகச் செலவுக்காக ‘பிராசஸிங்’ கட்டணத்தைத் தனித்தனியாக வசூலிப்பதால், கடன் வாங்கும் முன் அதனைச் சரிபார்ப்பது அவசியமாகும்.

ஐந்து லட்ச ரூபாய் கடன் பெறுபவர்கள் மாதம் 10,319 ரூபாய் முதல் அதிகபட்சமாக 16,485 ரூபாய் வரை திருப்பிச் செலுத்த வேண்டி வரும். உங்கள் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்துச் சரியான வங்கியைத் தேர்ந்தெடுப்பது நிதிச் சுமையைக் குறைக்க உதவும்.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

50 minutes ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

57 minutes ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

1 மணத்தியாலம் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

1 மணத்தியாலம் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago