ரூ.1000 போட்ட ரூ.2000… புதுவிதமான ஆன்லைன் மோசடி… ரூ.62 லட்சத்தை இழந்த நபர்… அதிர்ச்சி தரும் உண்மை…!

By Nanthini on புரட்டாதி 19, 2025

Spread the love

காரைக்காலை சேர்ந்த ஒருவரை whatsapp மூலம் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் 62.95 லட்சம் ரூபாய் முதலீடு செய்த நிலையில் ஏமாற்றப்பட்டார். இது தொடர்பாக அவர் புகார் அளித்த நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் மோசடி பணத்தில் 21 லட்சம் ரூபாய் மேற்குவங்கம், பரத் பூர், முரஷிதாபாத் பகுதியை சேர்ந்த சந்துகோஸ்(24) என்பவருடைய வங்கி கணக்கில் சென்றது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனி படை போலீஸ் சார் மேற்கு வங்கம் சென்று விசாரித்ததில் அந்த நபரின் தந்தையான ஆயுர்வேத மருத்துவர் சுவப்பான்குமார் (50) இந்த மோசடியில் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. பிறகு அவர்களை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்திய நிலையில் 2.5 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ள வங்கி கணக்கின் உரிமையாளர் மற்றும் மோசடியில் தொடர்பில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

   

ஆன்லைனில் வரக்கூடிய விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் செயலிகளில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது போன்ற மோசடி செயலிகள் வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக இது போன்ற பல செயல்களில் மக்கள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் இழந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்கு எண் மற்றும் ஓடிபி போன்றவற்றை வெளிநபர்கள் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.